மாளவிகா மேனன் மலையாள திரையுலகைத் தாண்டி தமிழில் ‘இவன் வேற மாதிரி’, ‘விழா’, ‘பிரம்மன்’, ‘வெத்துவேட்டு’, ‘நிஜமா நிழலா’, ‘பேய் மாமா’, ‘அருவா சண்ட’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களிலும் இவர் மிகவும் செயற்திறன் கொண்டவராக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறார். இதைப் பற்றிக் கேட்டபோது, “நீங்கள் எப்போதும் ஹோம்லியாக நடித்திருந்தவர், திடீரென்று இப்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது படம் கிடைக்க வேண்டுமென்பதற்காகவா? எனக் கேட்கிறார்கள். அது போலல்ல. தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப நான் மாற்றமடைந்துள்ளேன். அதுவே காரணம். இதில் தவறு எதுவும் இல்லை” என்றார்.
மேலும், “மலையாள படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்சிகளுடன் நடிக்க முடியாது. அப்படிப்பட்ட கதாபாத்திரங்களும் அதிகம் வருவதில்லை. ஆனால் தமிழ், தெலுங்கு படங்களில் அப்படி நடிக்க முடியும். சமூக வலைதளங்களில் கொஞ்சம் ஆக்டிவாக இருக்கிறேன். எனது ரசிகர்களுக்காகவே சில கவர்ச்சி புகைப்படங்களைப் பகிர்கிறேன். நான் மட்டுமா?” எனச் சிரித்துக்கொண்டு கூறினார்.தன்னைப் பற்றிய வதந்திகள் குறித்து, “இப்போது சமூக வலைதளங்கள் பெருகிவிட்டன. போலி ஐடி கணக்குகள் மூலம் முகம் காட்ட பயப்படும் சிலர், பிடிக்காத நபர்களைப் பற்றிய தவறான செய்திகளை விருப்பப்படி பரப்புகிறார்கள். இதுபோன்ற விஷயங்களை கவனிக்கவே கூடாது” எனத் தெரிவித்தார்.