மலையாள மொழியில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் ‘சைரன்’ மற்றும் ‘டிராகன்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர் என்றாலும், அவருக்கு மலையாள சினிமாவில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மலையாளத்தில் அவர் நடித்த படங்கள் மூன்று தான்.

இந்நிலையில், சுரேஷ்கோபி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா’ என்ற படத்தின் மூலம், அனுபமா மீண்டும் மலையாள திரையுலகில் கம்பேக் கொடுத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது.
இந்த விழாவில் அனுபமா பரமேஸ்வரன் பேசியபோது, என்னால் நடிக்க முடியாது என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து டிரோல் செய்தனர். ஆனால் அந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் இயக்குநர் பிரவீன், நான் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். கடந்த ஆண்டு ‘டிராகன்’ மற்றும் ‘தில்லுஸ்கொயர்’ படங்கள் வெற்றி பெற்றதன் மூலம் எனக்கு மேலும் உற்சாகம் ஏற்பட்டது. என்னை நேசிப்பவர்களுக்கும், என்னை விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் தொடர்ந்து என் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவேன் என கூறினார்.