மிக்ஜாம் புயல் – கன மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீரில் தத்தளித்த மக்களை மீட்பு குழுவினர் விரைந்து மீட்டனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினர், நிறுவனங்கள், தனிநபர்கள், சினிமா பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ரூ. 10 லட்சத்தை வழங்கியுள்ளார். இந்த செய்தியை உதய நிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிந்துள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.