Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

மீண்டும் ரீ ரிலீசாகிறது சிம்புவின் மாநாடு திரைப்படம்… ரசிகர்கள் கொண்டாட்டம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்திருந்த சிம்புவுக்கு, இந்த படம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி. மகேந்திரன் ஆகிய பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

டைம் லூப் கதையம்சத்துடன் உருவாக்கப்பட்ட இந்த படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், இப்படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றது.

‘மாநாடு’ திரைப்படம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா, X தளத்தில் அறிவித்தார்.இது தொடர்பாக 2021-ம் ஆண்டு, நடிகர் சிம்பு இந்த படத்திற்காக டப்பிங் செய்த வீடியோ ஒன்றை “வந்தான்… சுட்டான்.. செத்தான்.. REPEATU” என்ற தலைப்புடன் பகிர்ந்து, ‘மாநாடு’ விரைவில் திரையரங்குகளில் திரும்ப வருகிறது என அறிவித்துள்ளார். அத்துடன், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “மகிழ்ச்சியான செய்தி… சிம்புவின் பிறந்த நாளைக் கொண்டாட, ‘மாநாடு’ மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது” என்றும், நாளை முதல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News