நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் ஊர்வசி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, விஜய ராகவன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பான் இந்திய அளவில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கான கதையை ஜோஜூ ஜார்ஜ், சஃபர் சனல் மற்றும் ரமேஷ் கிரிஜா ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
‘ஆஷா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சஃபர் சனல் இயக்குகிறார். இதில் ஜோஜூ ஜார்ஜ் திரைக்கதையையும் எழுதியிருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.