தமிழ் மற்றும் தெலுங்குப் பட உலகில் முன்னணி தயாரிப்பாளராக உள்ளவர் ஏஎம் ரத்னம். தற்போது அவர் பவன் கல்யாணை நடிக்கவைத்துள்ள ‘ஹரிஹர வீரமல்லு’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். ஜூன் 12ம் தேதி திரையிடப்பட உள்ள இந்த படத்தை அவரது மகனான ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஒரு பிரமோஷன் நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னமும் கலந்து கொண்டு நீண்ட நேரம் உரையாற்றினார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் சுயநினைவு இழந்துவிட்டார் எனும் வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு அவரது தம்பியான தயாகர ராவ் மறுப்பு தெரிவித்தார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் அவர், “அண்ணன் ஏஎம் ரத்னம் சுயநினைவு இழந்துவிட்டார் என்ற செய்தியை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் இருக்கிறார். இந்த வகையான தவறான செய்திகளை பரப்புவதை உடனே நிறுத்துங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.