மும்பையை சேர்ந்த நடிகை இஷா தல்வார், 2012ஆம் ஆண்டு தேசிய விருதுகளை பெற்ற ‘தட்டத்தின் மறயத்து’ என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில ஆண்டுகள் பிஸியாக நடித்துவந்தார். தற்போது அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்துள்ளன.

ஆனால், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இஷா தல்வார் தற்போது கேரளாவின் பாரம்பரியமான களறி பயிற்று கலையை கற்று வருகிறார். கேரளாவில் உள்ள பிரபல களரி பயிற்சி நிலையத்தில் சேர்ந்து, கடந்த சில நாட்களாக தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எனினும், இது ஒரு புதிய கலையை கற்றுக்கொள்ளும் ஆர்வத்திற்காகவா அல்லது அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்திற்காகவா என்பதைப் பற்றிய தகவல் வெளிவரவில்லை.