ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள கருப்பு படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். மமிதா பைஜூ நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை அடுத்து மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கும் தனது 47 வது படத்தில் நடிக்க போகிறார் சூர்யா என்று கூறப்படுகிறது. ஆக்ஷன் கதையில் உருவாகும் இப்படத்தில் சூர்யா போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.
மேலும், இதற்கு முன்பு ஜீத்து மாதவன் இயக்கிய ஆவேசம் என்ற படத்தில் நாயகனாக நடித்த பகத் பாஸில் இந்த சூர்யா 47 வது படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.