சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சாய் பல்லவிஃ தனது வாழ்க்கைக் கதையை யாராவது திரைப்படமாக மாற்றினால், அதற்கு “பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி” என்ற தலைப்பை வைக்க விருப்பமுள்ளதாக கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் “ராமாயணம்” என்ற படத்தில் சீதையின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஒரு பேட்டியில் கலந்துகொண்ட போது, “உங்கள் வாழ்க்கை வரலாற்று படமாக வந்தால் அதற்கு என்ன தலைப்பாக வைப்பீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சாய் பல்லவி கூறியதாவது:
“என் வாழ்க்கை கதையை படமாக மாற்றினால், அதற்கு ‘பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி’ என்ற தலைப்பையே வைப்பேன். ஏனென்றால், நாம் எல்லோரிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்ள முடியாது. நானும் அவ்வாறேதான். நண்பர்களிடம் ஒரு விதமாகவும், உறவினர்களிடம் வேறொரு விதமாகவும், பெற்றோரிடம் இன்னொரு விதமாகவும் நடந்து கொள்கிறேன். எனக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. அதனால்தான் இந்த மாதிரியான தலைப்பை வைத்து படமாக வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்,” எனத் தெரிவித்தார்.