Friday, April 12, 2024

“சினிமாவில் எனக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது”-நடிகை சோனா புகார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சோனா திரையுலகத்தில் தானும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறியுள்ளார்.

கடந்த 3 வருடங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த மீ டூ மற்றும் பாலியல் குற்ற வழக்குகள் தற்போது மீண்டும் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில் இது குறித்து நடிகை சோனா அளித்திருக்கும் ஒரு பேட்டியில் இப்படி கூறியுள்ளார்.

நடிகை சோனா இது குறித்துப் பேசும்போது, “பாலியல் குற்றங்கள் எல்லா துறையிலும்தான் இருக்கிறது. எல்லா இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது பாருங்கள், பள்ளிகளில் இருந்தும் இது போல் குற்றசாட்டுகள் எழுந்திருக்கிறது. பாலியல் குற்றங்கள் எங்கு நடந்தாலும் அதற்கான முறையான விசாரணையும், தண்டனையும் அவசியம்.

திரைத்துறையை பொறுத்தவரை, தனித்து யாரையும் குற்றம் சொல்ல முடியாது. சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் அது போல் நடந்தது. அப்போதே அதை வெளிப்படையாக சொல்லி போராடினேன். நமக்கான உரிமைக்கு நாம்தான் போராட வேண்டும். அதற்காக அதை கடந்து செல்லாமல் மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதும் நல்லதல்ல.

உங்களுக்கு நடந்தால் அதை வெளிப்படுத்துங்கள். உங்கள் உரிமைக்கு குரல் கொடுங்கள். மக்களுக்கு தெரியும். எதுவும் நடக்கவில்லையெனில் அதை கடந்து செல்லுங்கள். வாழ்க்கை பெரியது. எனக்கு நடந்ததை கடந்து வந்து விட்டேன். அதுதான் எலலாருக்கும் நல்லது…” என்று சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News