Friday, April 12, 2024

ஆடுஜீவிதம் ஆட்டத்திற்கு பின்னர் அடுத்த படத்தை கையில் எடுத்த பிரிதிவிராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் திரைக்கு வந்த நடிகர் பிரித்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் ஏராளமானோர் மனதில் இடம்பிடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரபலமான மலையாள இயக்குனர் பிளெஸ்ஸி கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் காத்திருந்து பெரும் முயற்சிக்கு பின்னர் இப்படத்தை இயக்கி திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்.இந்நாள் வரை ஆடுஜீவிதம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது.

மலையாள முண்ணனி நடிகரான பிரிதிவிராஜ் மலையாளம் மட்டும் இல்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்து பிரம்மிக்க வைத்து வருகிறார். வெறும் நடிகராக மட்டுமில்லாது இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையை காட்டிவரும் பிரித்விராஜ் கடந்த ஆண்டு பிரபாஸ் நடித்திருந்த சலார் படத்தில் தனது கதாப்பாத்திரத்தின் மூலம் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.அதே சமயம் அப்படம் எதிர்பார்பை பூர்த்தி செய்யாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சலார் படத்திற்கு பிறகு பிரித்விராஜின் மார்க்கெட் வேல்யூ தற்போது டாப் லெவலுக்கு அதிகரித்துள்ளது. தொடர்ந்து தற்போது லூசிபர் 2 படத்தை இயக்க அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இதற்கிடையே லூசிபர் மற்றும் ப்ரோ டாடி படங்களை தொடர்ந்து அவர் L2- எம்புரான் என்ற மூன்றாவது படத்தையும் இயக்கவுள்ளார்.

முன்னதாக லூசிபர் மற்றும் ப்ரோ டாடி படங்கள் பெறும் வெற்றியை பெற்றன அதனை தொடர்ந்து லூசிபர் 2 – எம்புரான் என்ற படத்தை இயக்க போவதாக அறிவித்தது இருந்த நிலையில் தற்போது இயக்க களமிறங்கி உள்ளார் ப்ரிதிவிராஜ்.

இந்த படத்தின் சூட்டிங் அமெரிக்காவில் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் நடந்த நிலையில் படத்தின் முதல் பாகத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள நிலையில் அவர் ப்ரிதிவிராஜ் இயக்கும் எம்புரான் படத்திலும் நடிக்க கமிட்டானார்.இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரிகின்றன்.இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் மொழிகளில் பான் இந்தியா படமாக திரைக்கு வரவுள்ளது.

- Advertisement -

Read more

Local News