‘வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கன்னட செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கூலி திரைப்படத்திற்காக கடந்த 2 வருடங்களாக, திரைப்பட வேலைகளில் மட்டுமே என் முழு கவனமும் இருந்தது. என் குடும்பம், என் நண்பர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் என யாருக்கும் நேரம் கொடுக்கவில்லை. என் திரைப்பயணத்தில் கூலி படத்திற்காகப் பெரும் உழைப்பை கொடுத்துள்ளேன் என்றுள்ளார்.