Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

புதுமையான ஒன்றை கொண்டு வந்துள்ளேன்… லூசிஃபர் 2 உடன் 3ம் பாகத்தின் அப்டேட்டையும் கொடுத்த பிரித்விராஜ்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பிரித்விராஜ், இயக்குநராக மாறும் கனவுடன் ஐந்து வருடங்களுக்கு முன்பு மோகன்லாலுடன் ‛லூசிபர்’ என்ற அரசியல் பின்னணியைக் கொண்ட படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்து, மலையாள சினிமாவில் முதல் 200 கோடி வசூலித்த படமாகப் பெயர்பெற்றது. அதன் பின்பு ‛ப்ரோ டாடி’ என்ற படத்தை இயக்கிய பிரித்விராஜ், தற்போது மூன்றாவது முறையாக மோகன்லாலுடன் ‛லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‛எம்புரான்’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதத்தில் படம் வெளியாவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருக்கும் என்பதை தன்னைக் கூட உணராமல் வெளிப்படுத்தியுள்ளார் பிரித்விராஜ்.

‛லூசிபர்’ படத்தின் தொழில்நுட்பம் குறித்து அவர் கூறுகையில், “‛எம்புரான்’ படத்திற்காக நான் வழக்கமான லென்ஸ்களை பயன்படுத்தவில்லை. இதற்கு பதிலாக, அனமார்பிக்ஸ் என்கிற தொழில்நுட்பத்தில் 1:2:8 விகிதத்தில் காட்சிகளை உருவாக்கியுள்ளேன். இது படத்தை பார்ப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை அளிக்கும். ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவின் திறமையான பங்களிப்பும் இதில் உள்ளது,” என்றார். மேலும், “இதன் மூன்று பாகங்களிலுமே” என அவர் குறிப்பிட்டதன் மூலம் மூன்றாம் பாகம் இருப்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News