Touring Talkies
100% Cinema

Tuesday, April 8, 2025

Touring Talkies

மிமிக்ரி அதிகமாக பேசி என் குரலை இழந்தது போல் உணர்கிறேன்… நடிகர் மணிகண்டன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘காலா’, ‘ஜெய்பீம்’, ‘சில்லு கருப்பட்டி’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துத் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகர் மணிகண்டன். மேலும், ‘குட்நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது பல புதிய திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறார். தனது நடிப்புத்திறமையைத் தாண்டி, பல்வேறு பிரபலங்களின் குரலை எளிதாக ஒத்திசைத்து பேசும் ‘மிமிக்ரி’ கலையிலும் மிகவும் திறமைசாலியாகத் திகழ்கிறார். இந்த மிமிக்ரி திறமையின் காரணமாக அவருக்கு ஒரு பெரிய ரசிகர் மன்றமே உருவாகியுள்ளது.

இந்தக் குறித்து நடிகர் மணிகண்டன் கூறியதாவது: “ஒவ்வொரு கலைஞனுக்கும் அங்கீகாரம் என்பது மிக முக்கியமானது. அந்த அங்கீகாரம் இல்லாமல் ஒரு கலைஞன் முழுமையாகத் திகழ முடியாது. ‘மிமிக்ரி’ என்பது சவாலான ஒன்றாகும். ஆனால், அதன் மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறேன் என்பதில் எனக்கு பெருமை உள்ளது. பல நடிகர்களின் குரலை ஒத்திசைத்து பேசுவதால், சில சமயங்களில் என் சொந்தக் குரலையே மறந்துவிடுகிறேன். மேடை நிகழ்ச்சிகளில் என் இயல்பான குரலில் பேசவே மிகவும் சிரமமாக இருக்கிறது. அந்த அளவுக்கு என் இயல்பான குரலையே இழந்துவிட்டதுபோலவே எனக்கு உணர்வு ஏற்படுகிறது.

‘இந்த நிலைமையை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?’ என பலர் என்னிடம் கேட்கிறார்கள். அதற்கு எனது பதில், ‘ஆம், நிச்சயமாக எதிர்பார்த்தேன்’ என்பதே. ஒவ்வொருவருக்கும் ஷாருக்கான் போல ஒரு பெரிய நடிகராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அவர் போல ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பதையே நான் கடைப்பிடித்து வந்தேன்” என தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News