Touring Talkies
100% Cinema

Friday, July 11, 2025

Touring Talkies

‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு உதவி இயக்குநராக வேலை செய்யும் நாயகன், ஒரு பிரபல ஹீரோவை சந்தித்து காதல் கதையை சொல்கிறார். அந்தக் கதையை கேட்டு ஹீரோ ஆர்வமுடன் இருக்கும் போதும், இடைவேளைக்கு பிறகு கதை நகர மறுக்கும். அப்போது ஹீரோ “என்னாச்சு?” என்று கேட்கிறார். அதற்கு நாயகன் பதிலளிக்கிறார், “அது என் வாழ்க்கையில் நடந்த கதை. எங்களுக்கு பிரேக்க்அப் ஆகிவிட்டது” என்கிறார்.

அதற்கு ஹீரோ, “உங்க காதலியை மீண்டும் சந்திச்சு, கதையை மீதி எழுதணும். அப்பதான் கால்ஷீட் தருவேன்” என்று கூறுகிறார். இதற்குப் பிறகு, நாயகன் தனது காதலியை மீண்டும் சந்திக்க மணிபாலுக்குச் செல்கிறார். ஹீரோ சொன்னபடி காதல் வெற்றி பெற்றதா? படம் எடுக்கப்பட்டதா என்பது தான் ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் கதைக்களம்.

இந்தப்படத்தில், விஷ்ணு விஷாலின் தம்பியான ருத்ரா, உதவி இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். கதையை கேட்கும் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். ஹீரோயினாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். ‘பைவ் ஸ்டார்’ படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் ராமகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.vஇப்படம் நாயகனின் பள்ளிப் பருவம் தொடக்கம், பக்கத்து வீட்டு சீனியரிடம் கிரஷ் உருவாகும் நிலையில் தொடங்குகிறது. பசுமை நிறைந்த, கலகலப்பான காதல், கிஸ், சந்தோஷம் என ஒரு யூத் சப்ஜெக்டாக அமைந்துள்ளது.

கல்லூரி முடிந்ததும், ஒரு திருமண விழாவில் டாக்டரான மிதிலாவை சந்திக்கிறார் ருத்ரா. காதல் வலுப்பெறும் விதம், அவர்கள் இடையே ஏற்படும் சண்டைகள், பயணங்கள், காதலின் நிறுத்தம் ஆகியவை நயமிக்க காட்சிகளாக உருவாகின்றன. இடைவேளைக்கு பிறகு, அந்தக் காதலுக்கு என்ன நேர்ந்தது? பிரச்சனைகள் என்ன? மீண்டும் சேர்ந்தார்களா? என்பதே கதையின் மீதியைத் தீர்மானிக்கின்றது.ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த ருத்ரா, தனது முதல் படத்திலும் அதே வித்தியாசத்தில் உதவி இயக்குநராகவே வருவது அருமையான விஷயம். பள்ளிப் பருவத்திலும், இளையோரம் மற்றும் காதல், கோபம் ஆகிய பகுதிகளில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். பாடல்களில் அழகாக காட்சியளிக்கிறார். தமிழ்சினிமாவுக்கு புதிய யூத் ஹீரோ வந்துள்ளார் என்ற உணர்வு ஏற்படுகிறது.

திவ்யா எனும் பள்ளி தோழியாக நடிக்கும் நடிகை, சில காட்சிகளில் மட்டும் வந்தாலும், தனது அழகால் கவர்கிறார். மராட்டிய நடிகையான மிதிலா பால்கர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி சிறப்பாக நடித்துள்ளார். அவரது வெளிப்பாடுகள், நடனம், உடைகள், தோற்றம், மூக்குத்தி போன்றவை மனதில் நின்றுவிடுகின்றன.விஜயசாரதி ஹீரோவின் தந்தையாக, கருணாகரன் சித்தப்பாவாக, நிர்மல் பிள்ளை ஹீரோயின் தோழியாக, கஸ்தூரி அம்மாவாக, இப்படத்தில் வரும் அனைத்து துணை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். திருமண வீட்டு காட்சிகள் வண்ணமயமாக அமைந்துள்ளன.

இயக்குநர் மிஷ்கின், அவராகவே நடிக்கிறார். அவருடைய ஷூட்டிங், திட்டும், கோபப்படும் காட்சிகள் ரசிகர்களிடையே கைதட்டலை உருவாக்குகின்றன. விஷ்ணு விஷால் தனது உண்மையான வாழ்க்கையைப் பற்றிப் பேசும் வசனங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.பள்ளிப் பருவம், காதல், டிரிப், மிஷ்கின் ஷூட்டிங் ஆகிய எல்லாவற்றையும் சிறப்பாக கொண்டு செல்லும் இந்தப் படத்தில், ருத்ரா அறிமுக ஹீரோவாக நல்ல மதிப்பீட்டை பெறுகிறார். இது ஒரு யூத் புல்லான படமாக இருப்பதால், இளைஞர்கள் உற்சாகமாகக் கொண்டாடக்கூடிய படம் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

Read more

Local News