20 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மோகன்லால் மற்றும் நடிகை ஷோபனா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘துடரும்’. இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

இந்தப் படத்தின் கதைக்களம் என்னவென்றால், ஒரு கார் ஓட்டுநராக உள்ள மோகன்லால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எளிமையாக வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார். இந்த சூழலில் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள்தான் இந்தக் கதையின் மையமாக அமைந்துள்ளது. ‘திரிஷ்யம்’ திரைப்படம் போலவே, இது ஒரு குடும்ப மையமான திரில்லர் படம் என்பதால் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வரவேற்று வருகின்றனர். .
‘துடரும்’ திரைப்படம் தற்போது வரை ₹231 கோடி ரூபாய் வரையிலான வசூலை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக தென்காசி அருகிலுள்ள திருமலை முருகன் கோவிலுக்கு மோகன்லால் தங்கவேல் காணிக்கையாக வழங்கியுள்ளார். ‘துடரும்’ படத்தில் இடம்பெறும் ‘கொண்டாட்டம்’ என்ற பாடலில், “திருமலை முருகனுக்கு அரோகரா என்ற வரி இடம்பெற்று முக்கியத்துவம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது .