குழந்தைகளுக்கான பேண்டசி படத்தை இயக்குவதின் மூலம் அறிமுகமாகிறார் எஸ்.லதா. ‘மரகதமலை’ என்ற படத்தை தயாரித்து, கதை திரைக்கதை, வசனம், பாடலை எழுதி இயக்கவும் செய்கிறார்.இப்படத்தில் மாஸ்டர் சஷாந்த், அரிமா, மஹித்ரா, கலைக்கோ நடிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக சந்தோஷ் பிரதாப், கதாநாயகியாக தீப்ஷிக்ஹா மற்றும் முதன்மை கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஜெகன், சம்பத் ராம், வில்லானாக டெம்பர் வம்சி மற்றும் பலர் நடித்துள்ளனர். எல்.வி.முத்துகணேஷ் இசை அமைக்கிறார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.18ம் நூற்றாண்டில் நடந்த கதையாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு “தடா” காட்டுப்பகுதியில் மிக பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு, மொத்தம் 40 நாட்கள் தொடர்ந்து படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் மற்ற பணிகள் நடந்து வருகிறது.
