வெற்றிமாறன் விடுதலை 2 படத்தை தொடர்ந்து சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவார் என்று தகவல் முன்பே வெளியானது. சமீபத்தில் தயாரிப்பாளர் தாணு அவர்களும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என உறுதிப்படுத்தினார். ‘வாடிவாசல்’ படத்திற்காக சூர்யா காளைகளை வாங்கி வளர்க்கிறாராம். இதனுடன் படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

‘விடுதலை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ‘ஆர். எஸ். இன்போடெயின்மென்ட்’ தயாரிப்பில் வெற்றிமாறன் மற்றொரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இது வெற்றிமாறன் இயக்கும் ஒன்பதாவது திரைப்படமாகும். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ போன்ற வெற்றி படங்களுக்குப் பிறகு வெற்றிமாறன் மற்றும் தனுஷின் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்வது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.