Touring Talkies
100% Cinema

Thursday, August 7, 2025

Touring Talkies

ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து மலைப்பிரதேசத்தில் எளிமையாக வாழும் பாலிவுட் நடிகை பர்கா மதன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் பர்கா மதன். அக்காலத்தில் அவர் சினிமாவில் சிறந்த நிலையை எட்டியபோதும், தன்னையுடைய திரைப்பட வாழ்க்கையிலிருந்து முழுமையாக விலகினார். ஒரு காலத்தில் மிகச்சிறந்த கதாநாயகியாக இருந்த இவர், கோடிக்கணக்கான சொத்துகளையும் ஆடம்பரமான வாழ்க்கையையும் துறந்துவிட்டு தற்போது மலை பிரதேசத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவரைப் பற்றிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

திரைப்படங்களை விட்டுவிட்டு துறவியாக வாழ்ந்த அந்த நடிகையை நீங்கள் அறிந்திருக்க முடியுமா..? அவர் தான் பர்கா மதன். 1996-ஆம் ஆண்டு வெளிவந்த அக்‌ஷய் குமாரின் ‘கிலாடியோன் கா கிலாடி’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் பர்கா மதன் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் ரேகா, ரவீனா டாண்டன், இந்தர் குமார், குல்ஷன் குரோவர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆனால், 2003-ல் வெளியான ‘பூத்’ திரைப்படம் அவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் அவர் பேயாக நடித்திருந்தார். அதன் பிறகு, அவருக்கு ஹிந்தியில் பல வாய்ப்புகள் கிடைத்தன. ‘தேரா மேரா பியார்’, ‘சமே: வென் டைம் ஸ்ட்ரைக்ஸ்’ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை ஈர்த்தார்.

திரைப்படங்களைத் தவிர, தொலைக்காட்சி தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று இருந்தார். இருந்தாலும், தனது நடிப்பு வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே, 2012-ஆம் ஆண்டு துறவாகவேண்டும் என்ற திடீர் முடிவை எடுத்ததன் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆடம்பரங்களை விட்டு விலகி, இன்று மலைகளும் ஆறுகளின் அருகிலும் அமைதியான வாழ்வை வாழ்கிறார். திரைப்படங்களையும் நடிப்பையும் விட்டு விலகியிருந்தாலும், பர்கா மதன் தற்போது சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News