Friday, April 12, 2024

“கவர்ச்சி வேடமா வருது. அதான் டிவிக்கு வந்துட்டேன்…” – நடிகை சோனாவின் அறிவிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கவர்ச்சி, காமெடி, குணச்சித்திரம் என கலந்து கட்டிய நடிப்பில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை சோனா.

துணிவான பேச்சு, எதிலும் முன்னணியில் நிற்கும் தைரியம், சொந்த பிஸினஸ் என பல பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர்.

காமெடி கதாப்பாத்திரங்களில் இருந்து மாறுபட்டு படங்களில் துணிச்சலான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சோனா, தற்போது Colours Tv க்காக அபி டெய்லர்ஸ்’ என்ற தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சினிமா டூ சின்னத்திரை’ டிராவல் பற்றி நடிகை சோனா பேசும்போது, “சினிமாதான் எனக்கு அடையாளம் தந்தது. சினிமாதான் என் வாழ்க்கை. தமிழில் ஆரம்பத்தில் நான் கவர்ச்சி கதாப்பத்திரங்களிலேயே நடித்ததால் இப்போதுவரையிலும் அப்படிப்பட்ட வேடங்கள்தான் அதிகம் வந்தன.

ஆனால், மலையாளத்தில் அப்படி இல்லை. அங்கு வில்லி, குணசித்திரம், நகைச்சுவை என மாறுப்பட்ட பாத்திரங்களை செய்து விட்டேன். அதே போல் தமிழிலும் செய்ய வேண்டுமென்பதுதான் என் விருப்பம். இப்போதுதான் கொஞ்சம் மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் என்னை நோக்கி வர துவங்கியுள்ளது.

தொலைக்காட்சியில் இருந்து பல வருடங்களாகவே வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் என் மனதிற்கு பிடித்த மாதிரியான கேரக்டர் அமையாததால், நான் எதையும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்த “அபி டெய்லர்ஸ்” தொலைக்காட்சித் தொடர் வாய்ப்பை என்னால் மறுக்க முடியவில்லை.

இந்தத் தொடரில் நாயகன், நாயகி மற்றும் என்னுடைய கதாப்பாத்திரத்தை வைத்துதான் மொத்தக் கதையும் நகர்கிறது. இதில் எனக்கு மிகவும் வித்தியாசமான கேரக்டர். மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

இந்த அபி டெய்லர்ஸ்’ சீரியலை ‘வாலிப ராஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார். படத்தில் வேலை பார்த்த குழுதான் இந்த சீரியலிலும் வேலை செய்கிறார்கள். இது ஒரு சீரியல் போல இருக்காது. படம் போலத்தான் இருக்கும். இதில் நடிக்க நான் ஒத்துக் கொண்டதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.

நிஜத்தில் நான் ரொம்பவும் எளிமையாக, ஜாலியாக இருக்கும் ஆள், ஆனால் எனது கேரக்டர் மிகவும் அழுத்தமிக்க தைரியமான பிஸினஸ் வுமன் பாத்திரம். இது என்னுடைய இயல்புக்கு நேரெதிரானது. என்னால் எல்லா வகை கேரக்டர்களையும் செய்ய முடியும் என்பது இதன் மூலம் நிரூபணமாகும் என நம்புகிறேன்.

சீரியலுக்கு போய் விட்டேன் என்பார்கள். ஆனால் இதுவும் ஒரு நடிப்பிற்கான வாய்ப்பு. அவ்வளவுதான். மற்றபடி சினிமாதான் என் வாழ்க்கை. இப்போதும் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது தமிழில் மூன்று படங்களிலும், மலையாளத்தில் மூன்று படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து சினிமாவில்தான் இருப்பேன். அதில் எந்த மாற்றமுமில்லை. மாறுபட்ட கதாப்பத்திரங்களுக்காக காத்திருக்கிறேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News