2022ஆம் ஆண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா மிகப்பெரிய வெற்றியை பெற்று சுமார் 400 கோடி வசூலித்தது. தென்னிந்திய மொழிகளிலும் படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, தற்போது இதன் முன்கதையாக காந்தாரா சாப்டர் 1 என்ற பெயரில் ரிஷப் ஷெட்டி இயக்கியும், நடித்தும் வருகிறார். சமீபத்தில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம்பிடித்துள்ள ருக்மிணி வசந்த், இதில் கனகாவதி என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஏஸ், மதராஸி ஆகிய படங்களைத் தொடர்ந்து, ருக்மிணி வசந்தின் அடுத்த படமாக இது வெளியாகிறது. படம் வரும் அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நாயகி ருக்மிணி வசந்த் தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனைச் சுற்றிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தும் உள்ளார்.