தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண், கடந்த ஆண்டு ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதன் பின்னர் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்த தேர்தலுக்கு முன்பே அவர் நடித்த ‘ஹரிஹர வீர மல்லு’, ‘ஓஜி’, ‘உஸ்தாத் பகத்சிங்’ உள்ளிட்ட திரைப்படங்கள் படப்பிடிப்பில் இருந்தன.

துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சில மாதங்களாக சினிமா பணிகளை இடைநிறுத்தியிருந்த பவன் கல்யாண், பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு ‘ஹரிஹர வீர மல்லு’, ‘ஓஜி’ ஆகிய படங்களை தொடர்ந்து நடித்து முடித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக ‘உஸ்தாத் பகத்சிங்’ படப்பிடிப்பு தொடங்கிப் போய்க் கொண்டு வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்து வந்தார். தற்போது, மற்றொரு கதாநாயகியாக ராஷி கண்ணா இணைந்து நடிக்கிறார் என படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.