பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கும் கத்ரீனா கைப், தற்போது மாலத்தீவு சுற்றுலா துறைக்கான உலகளாவிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுடன் ஏற்பட்ட அரசியல் பதட்டங்களுக்குப் பிறகு, மாலத்தீவின் சுற்றுலா துறையை மேலும் ஈர்க்கும் வகையில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக மாலத்தீவின் தேசிய சுற்றுலா வாரியம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், “கத்ரீனா கைப்பை எங்களின் உலகளாவிய பிராண்ட் தூதுவராக நியமிப்பது எங்களுக்கு பெருமையான தருணமாகும். இது மாலத்தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகும்,” என்று தெரிவித்துள்ளது.