பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான அமீர்கான் நடிப்பில் ஆர். எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவான ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் கதாநாயகியாக நடிகை ஜெனிலியா நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக்கொண்டு வருகிறது.

மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார், மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்னொரு புதிய படத்திலும் அமீர்கான் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 24) அமீர்கான், ஜனாதிபதி திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் சந்தித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது