ஆந்திரப் பிரதேசம், புட்டபர்த்தியில் இன்று நடைபெற்ற சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் மக்களிடையே நடிகை ஐஸ்வர்யா உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் பங்கேற்று உரையாற்றிய நடிகை ஐஸ்வர்யா ராய், ‘ஒரே ஒரு இனம் தான், அது மானுட இனம். ஒரே ஒரு மதம் தான், அது அன்பின் மதம். ஒரே ஒரு மொழி தான், அது உள்ளத்தின் மொழி. கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந்தவர் என்று தெரிவித்தார். ஐஸ்வர்யா ராயின் இந்த உரையாடல் அனைவரையும் கவர்ந்து வருகிறது

