காந்தாரா முதல் பாகம் வெறும் ரூ.15-20 கோடியில் தயாரிக்கப்பட்டு அப்படம் ரூ. 400 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தற்போது வெளியாகியுள்ள காந்தாரா 2-ம் பாகத்திற்கு ரூ. 125 கோடி வரை பட்ஜெட் செலவானதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் சம்பளத்தைப் பொறுத்தவரை, முதல் பாகத்தில் நாயகனாகவும் இயக்குனராகவும் நடித்த ரிஷப் ஷெட்டி ரூ.4 கோடி மட்டுமே வாங்கியதாகக் கூறப்பட்டது. இந்த முறை, லாபத்தில் ஒரு பங்கை வாங்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.ரிஷப் ஷெட்டியுடன், ருக்மிணி வசந்த், ஜெயராம், மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தனர். அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.2 கோடி கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
