கன்னட திரையுலக நடிகர் ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். அந்தப் படத்தின் முன்னோட்டமாக உருவாகியுள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வில் அளித்த பேட்டியில், அடுத்ததாக நடிக்க உள்ள ‘ஜெய் ஹனுமான்’ படத்தைப் பற்றிய அப்டேட்டையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், “’காந்தாரா : சாப்டர் 1′ வெளியாகும் வரை எந்தப் படத்திலும் கமிட் ஆக விரும்பவில்லை. ஆனால் பிரசாந்த் வர்மாவின் ஸ்கிரிப்ட்டைக் கேட்ட பிறகு உடனடியாக ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் கையெழுத்திட்டேன். பிரசாந்த் வர்மா ஒரு அற்புதமான ஸ்கிரிப்ட்டுடன் வந்தார், கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நாங்கள் போட்டோஷூட்டை முடித்துவிட்டோம். தற்போது ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கான தேதியை நிர்ணயிப்போம்” என்றார்.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடித்த ‘ஹனுமான்’ என்ற தெலுங்கு படம் கடந்த ஆண்டு வெளியானது. அந்த படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.