நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையிலிருந்து கோவைக்கு புறப்பட்டார். புறப்படும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவிருக்கும் படம் குறித்து கூறினார்.

“கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசை உள்ளது. ஆனால் இன்னும் இயக்குனர் முடிவாகவில்லை,” என்றார்.
அப்போது ஒரு செய்தியாளர், “திரைக்கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா?” என்று கேட்டார். அதற்கு ரஜினி “நோ கமெண்ட்ஸ்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். மேலும், ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக பாலக்காடு செல்ல உள்ளதாகவும், அங்கு ஆறு நாள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.