ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘காஞ்சனா’ தொடரின் நான்காவது பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை மணி ஷா தனது கோல்ட் மைன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், முக்கியமான இன்னொரு கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை நோரா பதேகி நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் ‘கே.ஜி.எப்’ புகழ் ராமசந்திரா ராஜு நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே பொள்ளாச்சி மற்றும் சென்னையில் நடைபெற்றது. அடுத்த கட்டமாக புதுச்சேரியில் சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த கட்டத்தில் ‘காஞ்சனா’ தொடரின் சிறப்பு அம்சமான பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என்று கூறப்படுகிறது.
தற்போது இந்த பிளாஷ்பேக் காட்சிக்காக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு பெரிய அளவிலான சம்பளம் வழங்கப்படுவதாக சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.