‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். சமீபத்தில் இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. அதன் பின்னர், ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்ததாக சிம்புவின் 49வது படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதற்கிடையில் திடீரென சிம்புவிற்கு வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படம் தள்ளிப்போனது. இதனால், அவர் தற்போது வேறு ஒரு புதிய படத்தை இயக்கத் தயாராகி வருகிறார்.
இந்நிலையில், ராம்குமார் பாலகிருஷ்ணன் சமீபத்தில் நடிகர் விக்ரமை சந்தித்து, புதிய படத்திற்கான கதையை சொன்னதாகவும். அந்தக் கதை விக்ரமிற்கு மிகவும் பிடித்துப்போனதால் விக்ரம் இப்படத்திற்கு OK சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியாகும் என்றும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த இறுதியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.