2018ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘ராட்சசன்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் அமலாபால், முனீஷ்காந்த், அம்மு அபிராமி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகியதிலிருந்து, ராட்சசன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என இயக்குநர் ராம்குமார் தெரிவித்திருந்தாலும், இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால், தனது தம்பி ருத்ரா நடித்துள்ள ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ‘கட்டா குஸ்தி 2’ மற்றும் ‘ராட்சசன் 2’ குறித்து முக்கிய தகவலை வெளியிட்டார்.
அதில், அடுத்ததாக ‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளேன். அதன் பின்னர் ‘ராட்சசன் 2’ படத்தில் நடிக்கிறேன். அப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று உறுதியாகக் கூறுகிறேன்” என தெரிவித்தார். மேலும், தற்போது ராம்குமார் இயக்கும் ‘இரண்டு வானம்’ என்ற படத்திலும் விஷ்ணு விஷால் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.