‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய அருண்குமார், நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். முதலில் இந்த படத்தை தயாரிக்க மட்டும் எண்ணிய கமல் பின்னர் அந்தக் கதை கமலுக்கு மிகவும் பிடித்திருந்ததனால், அந்த படத்தில் அவரே நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்குப் பிறகு, ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கும் தனது 237வது திரைப்படத்தில், ‘தக்லைப்’ திரைப்படத்திற்கு அடுத்த படமாக நடிக்க இருந்தார் கமல். ஆனால், அந்தக் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளி போனதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, 237வது திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்குவதற்காக திட்டமிட்டு இருக்கின்ற கமல், அதற்குமுன்பாக அருண்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து அதை முடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.