சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் வெளியாகி 50 நாள்கள் ஆன நிலையில், இப்படத்தின் வெற்றி குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “தனிப்பட்ட முறையில் இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டர் சவாரி. இப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு ஒரு அது கிட்டத்தட்ட ஒரு போரையே எதிர்கொண்டது.எங்கள்மீது குறிவைக்கப்பட்ட வெறுப்பு மற்றும் அஜெண்டாக்களுக்கு அப்பால் இங்கு அன்பு இருந்தது. அந்த அன்புதான் இந்தப் போரில் வெற்றிபெற வைத்திருக்கிறது. #TheOneWon ❤️உண்மையான ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்கு நன்றி. அவை நிச்சயம் எனது அடுத்தடுத்த படைப்புகளில் பிரதிபலிக்கும்.இப்படத்தில் பணியாற்றிய அனைவர்க்கும் எப்போதும் ஸ்பெஷல் படமாக இருக்கும். Love you all, my dear Audience.” என்று பதிவிட்டிருக்கிறார்.
