ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தனது 45-வது திரைப்படமாக டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் படத்திற்கு “கருப்பு” என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.