மலையாளத் திரையுலகைச் சேர்ந்த நடிகை அனந்திகா சனில்குமார், தமிழில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய ‘லால் சலாம்’ படத்தில் நடித்தார். அதன் பின்னர், விக்ரம் பிரபு நடித்த ‘ரெய்டு’ திரைப்படத்திலும் இடம்பெற்றார்.

தற்போது, அவர் நடித்துள்ள தெலுங்குப் படம் ‘8 வசந்தலு’ ஜூன் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நடைபெறும் ப்ரொமோஷன் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு வரும் அனந்திகா, தனது பெரிய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது சொற்களின்படி, “நான் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவைத் தவிர, சட்டம் தொடர்பான பாடத்தையும் படித்து வருகிறேன். எனக்கு அரசியல் மீது ஆர்வம் உள்ளது. அதுவே என் மிகப் பெரிய ஆசை. ஒருநாள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும். பெண்கள் அரசியலுக்குள் வருவது புதிதல்ல. ஆனால் இப்போது அரசியலில் பங்கேற்கப் போவதில்லை. எனது 40வது வயதில் அரசியலில் ஈடுபட விரும்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.