விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிபாசா பாசு. பின்னர் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக பல படங்களில் நடித்தார். நடிகர் கரண்சிங் குரோவரை திருமணம் செய்த பிபாசாவுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பின்னர் பிபாசாவின் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. இதை ஒட்டி சமூக வலைதளங்களில் அவரை விமர்சிக்கும் பதிவுகள் வெளியாகின. இதற்கு பதிலளித்த பிபாசா தனது எக்ஸ் பக்கத்தில், “உங்கள் நேரடி விமர்சனங்களுக்கு நன்றி. ஆனால் மனித இனம் இவ்வளவு ஆழமற்றதாகவும் இழிவானதாகவும் இருக்கக்கூடாது என்பதையே நம்புகிறேன். பெண்கள் பல்வேறு தளங்களில் தங்களை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில்தான் உள்ளனர்,” எனக் கூறினார்.
நான் அன்பும் ஆதரவும் தரக்கூடிய தன்னம்பிக்கையுள்ள பெண். மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்கள் என்னை ஒருபோதும் எதுவும் செய்யமுடியாது. எனது இடத்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால், இத்தகைய கொடூர விமர்சனங்களால் தீவிரமாக பாதிக்கப்படக்கூடியவள். பெண்களை புரிந்து கொண்டு உற்சாகப்படுத்தினால், அவர்கள் மேலும் உயர்வடைவார்கள். நாங்கள் தடுக்க முடியாத பெண்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.