தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வெற்றி பெற்ற சிம்ரன், தற்பொழுது வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். முன்னதாக, கே.பாலச்சந்தர் இயக்கிய ‘பார்த்தாலே பரவசம்’, மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, மற்றும் ‘ராக்கெட்ரி’ போன்ற படங்களில் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர் விஜயுடன் நட்டமாடும் திறமையில் சமமாக இருந்த ஒரே நடிகையாகும் என்பதற்காக பாராட்டைப் பெற்றவரும் சிம்ரனே. திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி நடிப்பில் செயற்பட தொடங்கியுள்ளார்.

தற்போது, கதாநாயகியாக மட்டுமின்றி, தனித்துவமான கதைகளில் முக்கியமான துணை வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது நடிகர் சசிகுமாருடன் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘தி லாஸ்ட் ஒன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், சிம்ரன் தனது வாழ்க்கைப் பயணம், தமிழ் சினிமாவைச் சுற்றியுள்ள அன்பு மற்றும் இந்தி சினிமாவில் வாய்ப்புகள் இருந்தபோதிலும் ஏன் அவை மீது ஈடுபாடு கொள்ளவில்லை என்பதைக் குறித்து மிக நேர்மையுடனும் உணர்வுபூர்வமாகவும் பகிர்ந்துகொண்டார்.
அதில் அவர் கூறியதாவது: நான் ஒருபோதும் தமிழை விட்டு இந்தியில் வேலை செய்யவேண்டும் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. தமிழில் நடிப்பது எனக்கு மிகவும் வசதியாகவும், இங்கு உள்ள சூழல் என் வீட்டை போன்ற உணர்வை தருகிறது. எல்லாம் இயல்பாகவே நடைபெறுகிறது. தமிழில் வேலை செய்யும் அனைவரும் மிகவும் எளிமையானவர்கள். பெரிய நடிகராக இருந்தாலும் கூட, இங்குள்ளவர்கள் மிகவும் இனிய மனப்பான்மையோடு நடந்துகொள்கிறார்கள். அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும் விஷயம்,” என தெரிவித்தார்.