தற்போது சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 45’ படத்திற்கான இசைப் பணிகளில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இணைந்து பணியாற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சுற்றி உருவாகியிருக்கும் எதிர்பார்ப்பு மிகுந்த அளவில் இருக்கிறது, மேலும் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் படி, இந்தப் படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இப்படத்தில் நடிகை திரிஷாவின் காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், அடுத்த வாரம் சூர்யாவின் காட்சிகள் முடிவடைய உள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இப்படத்திற்கு ‘வேட்டை கருப்பு’ என பெயரிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சாய் அபயங்கர், ‘சூர்யா 45’ பற்றிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில், சூர்யா 45 படத்திற்கான இசையமைப்புப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சூர்யா சாரை நான் சிறிய வயதிலிருந்தே பார்த்து வந்துள்ளேன். எனவே இது எனக்கு ஒரு ரசிகனின் கனவுப் போன்றதாக இருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் மற்றும் அனிருத்துடன் முன்பு பணியாற்றியுள்ளதால் எனக்கு பின்னணி இசை வேலை செய்வதில் மிகுந்த விருப்பம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.