நடிகை ஆல்யா மானசா இனியா தொடருக்குப் பிறகு எந்த தொடரிலும் நடிக்காத நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தகவல் அவரது ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து ஆல்யா மானசாவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடரில் நடிக்கவுள்ளேன். எனது பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் தகவலை உங்களுக்கு பகிர்கிறேன் என்ற குறிப்பிட்டுள்ளார்.
