‘விண்ணைதாண்டி வருவாயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் விஜய்யுடன் இணைந்து ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக தமிழில் இவர் நடித்த கடைசி படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகும்.
‘டிராகன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கயாடு லோஹர் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறியுள்ளார். தற்போது ஆகாஷ் பாஸ்கர் இயக்கும் ‘இதயம் முரளி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், நடிகைகள் சமந்தா மற்றும் கயாடு லோஹர் இருவரும் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் வந்த அவர்களை அதிகாரிகள் வரவேற்றதுடன், சாமி தரிசனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்தனர். தேவஸ்தானத்தின் சார்பில் தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.