திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தனது குடும்பத்தினருடன் நடிகை அமலா பால் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
முதலில், கோவிலில் அமைந்துள்ள சம்பந்த விநாயகரை தரிசித்துவிட்டு, பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசித்தார்.
அமலா பாலுடன், அங்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், அவருடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.தொடர்ந்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கு மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கப்பட்டது.