நடிகை நித்யா மேனன், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் எடுத்துக்கொள்ளும் கதாபாத்திரங்களில் 100% பங்களிப்பை கொடுக்க மிகவும் கடினமாக உழைத்து, ரசிகர்களை மெய்சிலிர்க்க செய்கிறார்.
நித்யா மேனன், தனுஷ் உடன் நடித்த “திருச்சிற்றம்பலம்” படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம், அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது, இது சமீபத்தில் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
தனுஷ் இயக்கும் “இட்லி கடை” படத்தில் நடிக்கும் நித்யா மேனன், சமீபத்தில் அளித்த பேட்டியில், “இட்லி கடை” படப்பிடிப்பில் நான் சில நாட்கள் கலந்துகொண்டேன். “திருச்சிற்றம்பலம்” எனக்கு மிகவும் கம்ஃபர்டாக இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் அதுவாக இல்லை; எனது கம்ஃபர்ட் ஜோனிலிருந்து இரண்டு மடங்கு வெளியே வந்துவிட்டேன். நீங்கள் நான் இப்படியாக நடிப்பேன் என நினைக்கவே முடியாது. இது எனக்கு மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.