Friday, October 11, 2024

மீண்டும் பிக்பாஸ்-ல் என்ட்ரி கொடுத்த சாச்சனா… என்னதான் நடக்குது என ரசிகர்கள் புலம்பல்! #BiggBoss Tamil 8

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் சமீபத்தில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியினை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி அல்ல என 8 சீசன்களாக போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் தொகுப்பாளர்கள் பலமுறை கூறியிருந்தாலும், ரசிகர்கள் இதை நம்ப மறுக்கின்றனர். இதற்கு காரணம், நிகழ்ச்சியில் நிகழும் சில அபத்தமான விஷயங்களே என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். 

‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா, பிக் பாஸ் வீட்டில் 2வது போட்டியாளராக நுழைந்தார். ஆனால், 24 மணி நேரத்துக்குள் முதல் ஆளாகவே அவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றினர். பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ள சில போட்டியாளர்கள் திட்டமிட்டு சாச்சனாவை வெளியே அனுப்ப சதி செய்ததாக கூறப்படுகிறது. சாச்சனா இதனால் கதறி அழுதபடி கோப்பையை உடைத்து வெளியேறியுள்ளார். இந்நிலையில், அவரை மீண்டும் ஒரே வாரத்திற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக அனுப்பி பிக் பாஸ் விளையாட்டை ஸ்கிரிப்ட் போல் விளையாடுகின்றனர் என ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 

இவர்களுடன் சேர்ந்து ஜாக்குலின் உள்ளிட்ட சில போட்டியாளர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் காப்பாற்ற ஏற்கனவே விஜய் டிவி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ரவீந்தரையும் இந்த வாரம் காப்பாற்றுவார்கள் என தெரிகிறது. சாச்சனா மீண்டும் உள்ளே வந்ததும், லீஸ்ட் பர்ஃபார்மன்ஸ் போட்டியாளராக ரஞ்சித்தை குறிப்பிட்டார். இதனால், அவரை வெளியே அனுப்ப திட்டமிட்டார்களா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன.

- Advertisement -

Read more

Local News