மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனன், தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தனுஷ் நடித்த ‘மாறன்’ படத்தில் நடித்தார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ படத்திலும் நடித்தார். இப்போது, பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’, கார்த்தியுடன் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர்கள் ஒப்பிடும் போது, நடிகைகளுக்கு போதுமான முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்று மாளவிகா மோகனன் தெரிவித்தார். அவர் கூறியதாவது, ‘ஒரு படம் வெற்றியடைந்தால், அதற்கான புகழையும் பரிசையும் நடிகருக்குத்தான் அளிக்கின்றனர்.
ஆனால், நடிகைகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. படம் தோல்வியடைந்தால், நடிகையை குற்றம் கூறுவதே வழக்கம். இது தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாது, பல இடங்களில் நிலவுகிறது. இது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது’ என்றார்.