கோலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டிலும் பிசியாகும் நடிகை கயாடு லோஹர்!

‘டிராகன்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கயாடு லோஹர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவர் ‘இதயம் முரளி’, ‘இம்மார்ட்டல்’, ‘மஞ்சணத்தி’ மற்றும் ‘அரசன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இளம் நடிகைகளில் கவனிக்கப்படும் ஒருவராக உருவெடுத்து வரும் அவர், பல மொழித் திரைப்படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத் திரைப்படங்களிலும் தனது நடிப்பு பயணத்தை விரிவுபடுத்தியுள்ள கயாடு லோஹர், ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்திற்குப் பிறகு ‘ஐ ஆம் கேம்’, ‘தி இன்ட்ரோ’ மற்றும் ‘தாரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் மூலம் மலையாளத் திரையுலகிலும் தனது இடத்தை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறார்.

அதேபோல், தெலுங்கு திரையுலகிலும் அவர் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். நடிகர் நானியுடன் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நடித்து வரும் அவர், அதனைத் தொடர்ந்து நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதுமட்டுமின்றி, மேலும் சில தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பது தொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக தற்போது ஐதராபாத்தில் தங்கியிருந்து பல்வேறு திரைப்பட வாய்ப்புகளை பரிசீலித்து வரும் கயாடு லோஹர், வணிக ரீதியிலான திரைப்படங்களில் கதைக்கேற்ப கவர்ச்சியான தோற்றங்களில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் எதிர்காலத்தில் அவர் தெலுங்கு திரையுலகில் மேலும் பல முக்கிய வாய்ப்புகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading