Wednesday, April 10, 2024

விமான பணிப்பெண்களின் விருப்பத்தை தெரிந்து கொண்ட விஷால்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘தாமிரபரணி’ , ‘பூஜை’ படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரியுடன் விஷால் இணைந்திருக்கும் படம் ‘ரத்னம்’. இந்தப் படத்தில் நடித்து முடித்துள்ள விஷால், அடுத்து’ துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார்.

முதல் முறையாக இயக்குனராக அடியெடுத்து வைப்பதால் அந்தப் படம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்று முடிவு செய்திருக்கும் விஷால், அந்தப் படத்தை வெளிநாடுகளில் அதிக காட்சிகளை படமாக்க இருக்கிறார்.

இதற்காக கடந்த மாதம் லொக்கேஷன் பார்க்க லண்டன், அஜர்பைஜான், மால்டா ஆகிய வெளிநாடுகளுக்கு சென்று படபிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்துள்ளார். அங்கிருந்து சென்னை திரும்பிய விஷாலுக்கு விமான பணிப் பெண்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனது வலைப்பக்கத்தில், “துபாய் வழியாக இந்தியா திரும்பும் போது விமான பணிப் பெண்களிடம் இருந்து எனக்கு கிடைத்த ஆசீர்வாதத்துக்கு நன்றி. காயத்ரி, டயானா, ரிஷிட், ரீனா, கிம் ஆகியோர் எனது நாளை உற்சாகமானதாக மாற்றினார்கள்.

எனக்காக வாழ்த்துக் குறிப்பு எழுதுவதற்கும் சாக்லேட் கொடுப்பதற்கும் நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற நிச்சயம் உழைப்பேன்” என்று விஷால் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News