Tuesday, September 17, 2024

பப்புவா நியூ கினி நாட்டுடன் இணைந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படம்… ஜூலை மாதத்தில் தொடங்கும் படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பா.ரஞ்சித், பப்புவா நியூ கினி நாட்டுடன் இணைந்து புதிய படமொன்றை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது இந்தியா மற்றும் பப்புவா நியூ கினி இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் படத்தை மலையாள இயக்குநர் டாக்டர் பிஜூ இயக்குகிறார். இதில் ரிதாபரி சக்ரவர்த்தி மற்றும் பிரகாஷ் பாரே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ‘Papa Buka’ என பெயரிடப்பட்டுள்ளது.பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார், மேலும் சிலிக்கான் மீடியாவும் இவருடன் இணைகின்றது.

இந்த இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து, பப்புவா நியூ கினியின் நேட்டிவ் ஆர்ட்ஸ் அண்ட் ஃபேஷன் அகாடமி (NAFA) இப்படத்தை தயாரிக்கிறது.இந்தப் படம் இரண்டாம் உலகப் போரின் காலத்தில் ஜப்பானியர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய படைகளுடன் போராடிய இந்திய வீரர்களை பற்றிய புத்தகத்தை எழுத, பப்புவா நியூ கினி நாட்டின் போர்ட் மோர்ஸ்பிக்கு செல்லும் இந்திய வரலாற்றாசிரியர்கள் ரொமிலா மற்றும் ஆனந்த் ஆகியோரின் கதையை மையமாகக் கொண்டு உருவாகின்றது. இதன் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது.

- Advertisement -

Read more

Local News