Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சல்மான்கானுக்கு வில்லனாகும் சத்தியராஜ்? இதுபற்றி பேசினால் என்மீது வழக்கு தொடருவார்கள் என்ற சத்தியராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS?

நடிகர் சத்யராஜிற்கு தொடர்ச்சியாக பல படவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் மீனாட்சி சவுத்ரியின் அப்பாவாக நடித்தார்.அதன் பிறகு விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேசினார். அப்போது, கூலி மற்றும் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தில் அவர் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்தும் தெரிவித்திருந்தார்.

மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக “என்னம்மா கண்ணு சௌக்கியமா” என்று மிரட்டலாக நடித்த சத்யராஜ், அந்த படத்துக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை. தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி படத்தில் ரஜினியின் நண்பராக சத்யராஜ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை அதிகாரப்பூர்வமாக சத்யராஜ் அவர்களே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சிக்கந்தர் படத்தின் மெயின் வில்லனாக சத்யராஜ் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, கம்பெனியின் அக்கிரிமெண்ட் படி இதுபற்றி பேச முடியாது என கூறினார். அதை மீறி சொன்னால் வழக்கு தொடருவார்கள் என்றார். இதற்கிடையில் சத்யராஜ் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றால் இதுபற்றி ஏன் பேசுவார் என விழா மேடையிலேயே ஒருவர் கூற, சத்யராஜ் அந்த படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News