Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

‘என்றும் என் நினைவில் பாலு’ SPB-ஐ நினைவுகூர்ந்து மனமுருகிய இளையராஜா !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் 74வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. 2020ல் கொரோனா காலத்தில் எஸ்.பி.பி.யின் மரணம் திரையுலகிற்கு பெரிய இழப்பாக இருந்தது. அவரின் நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான இளையராஜா, எஸ்.பி.பி-யின் பிறந்தநாளை நேற்று நினைவுகூர்ந்தார்.

தனது எக்ஸ் பக்கத்தில், ‘என்றும் என் நினைவில் பாலு… மிஸ் யூ’ என்று உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். திரையுலகில் இளையராஜா இசையமைப்பில் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எஸ்.பி.பி. பாடியுள்ளார்.

அவர் மறைவால் தாங்க முடியாமல் தேம்பி அழுத இளையராஜா, எஸ்.பி.பி.யின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று அவரது மறைவு நேரத்தில் திருவண்ணாமலையில் மோட்ச விளக்கு ஏற்றி நெகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News