Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தன் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் ஞானவேல்… என்ன கதை என்று தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் த. செ. ஞானவேல், சரவண பவன் ராஜகோபால் வழக்கை திரைப்படமாக்க திட்டமிட்டு உள்ளார். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரவண பவன் ராஜகோபால் – ஜீவஜோதி வழக்கின் அடிப்படையில் தனது புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

ராஜகோபால், தனது சரவண பவன் உணவகத்தை நடத்தி வந்த நிலையில், ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக உச்சநீதிமன்றத்தில் தண்டனை பெற்றார். இந்த வழக்கு நடந்தபோது பத்திரிகையாளராக இருந்த த. செ. ஞானவேல், இந்த வழக்கை ஒரு புதிய கோணத்தில் படம் எடுப்பதை திட்டமிட்டுள்ளார். இதற்கான படத்துக்கு ‘தோசா கிங்: மசாலா அண்ட் மர்டர்ஸ் எனப் பெயரிட்டுள்ளார்.

ஹிந்தியில் தயாராகும் இந்தப் படத்தை ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஞானவேல் வேட்டையன் வெளியீட்டு பணிகளில் இருக்கிறார். இது முடிந்ததும், அவர் தனது அடுத்த படமாக ‘தோசா கிங்’ படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News